ஆப்கானில் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டு கொலை

காபூலில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டதில் ஆப்கான் உயர் நீதிமன்றின் இரு பெண் நீதிபதிகள் உயிரிழந்துள்ளனர். 

நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் தெரிவித்தார். 

நாட்டின் உயர் நீதிமன்றத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் பணி புரிகின்றனர். இந்த தாக்குதலை காபூல் போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

எனினும் துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக காபூலில், உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து கொலை செய்யும் புதிய போக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x