சுஷாந்த் சிங் வீட்டில் நண்பர்களுடன் கஞ்சா புகைப்பார் – சமையலர் பகீர் தகவல்!
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு போதை பொருளும் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அவரது சமையலர் அளித்த வாக்குமூலத்தில் 2018-ல் தான் வேலைக்கு சேர்ந்த காலத்திலிருந்து அவர் கஞ்சா புகைப்பதை பார்த்திருக்கிறேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் சுஷாந்தின் சமையலர் தீபேஷ் சாவந்த், அவர் காதலியின் சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபேஷ் அளித்த வாக்குமூலத்தில், 2018-ல் நான் சமையலராக சேர்ந்த பின்னர் இரண்டு முதல் மூன்று நாட்களில் சுஷாந்த் சிங் அவரது நண்பருடன் கஞ்சா புகைப்பதை கண்டேன். அங்குள்ள மூத்த சமையலர் அசோக்கிடம் கேட்ட போது, அவர் கஞ்சா தான் என கூறினார்.
நான் இதுவரை அவருக்கு கஞ்சா வாங்கி தந்தது கிடையாது. அவருக்கு முதலில் கரண் என்பவர் தான் கஞ்சாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் முழு பெயர் எனக்கு தெரியாது. ஆனால் எனது சகாக்களில் ஒருவரான ரிஷிகேஷ் பவார் சுஷாந்த் ஐயாவுக்கு கஞ்சா கொண்டு வருவார். அப்பாஸ் கலூய் என்பவருடன் அவர் அடிக்கடி கஞ்சா புகைப்பார் என கூறியுள்ளார்.
ரியா சக்கரவர்த்தியிடம் ஞாயிறன்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சுஷாந்த் கஞ்சா புகைப்பது தெரியும். நான் அதனை விட்டுவிடும் படி பலமுறை கூறியுள்ளேன் என தெரிவித்திருக்கிறார். அவரது இறப்புக்கு போதை பொருளும் காரணம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.