ஆயுத கலகத்திற்கு பிறகு மாலியின் ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர், பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு !!!

ஆயுதமேந்திய வீரர்கள் அவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி, பல மாதங்களாக மேற்கொண்ட தொடர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினாலும், வியத்தகு வகையில் படையினரால் அவர் இல்லத்திலேயே தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினாலும் அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவியிலிருந்து விலகிய அவர், இராணுவ கலவரத்தைத் தொடர்ந்து இரத்தத்தை சிந்த விரும்பவில்லை.எட்டு ஆண்டுகால இஸ்லாமிய கிளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் நாட்டின் கொந்தளிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தனது அரசாங்கமும் தேசிய சட்டமன்றமும் கலைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
2013 ஆம் ஆண்டில் ஜனநாயக ரீதியாக மாலியின் ஜனாதிபதியாக கெஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் கெஸ்டா இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றாரர்.
ஆனால் ஊழல், பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தல் மற்றும் நாட்டின் பகுதிகளில் வகுப்புவாத வன்முறை ஆகியவற்றின் மீது கோபம் காரணமாக அவருக்கு எதிராக சமீபத்திய மாதங்களில் பல பெரிய போராட்டங்களைத் எழச் செய்துள்ளது.
அதே நேரத்தில் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள், முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவை படையினரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ளன.
இந் நிலையில் கன்சர்வேடிவ் இமாம், மஹ்மூத் டிக்கோ தலைமையிலான ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணி, கெஸ்டாவின் பதவி விலகலுக்கு பின்னர், ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது உட்பட சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.