முகமது நபி கார்ட்டூன் அறிவிப்பு; தமிழகத்தில் வெடிக்கப்போகிறதா கலவரம்?

முகம்மது நபி பற்றிய கார்ட்டூன் வெளியிடப்போவதாக, மாரிதாஸ், மற்றும் அவரது ஆதரவாளர் கார்ட்டூனிஸ்ட் வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடிக்கொண்டிருக்கிறது என்று மத்திய, மாநில அரசு சொல்லிக்கொண்டாலும், சமூக வலைத்தளங்களில் வேறு திசையில் விவாதப்பொருள் சென்று கொண்டிருக்கிது. தமிழ்நாடு யங் திங்கர்ஸ் ஃபாரம் (Tamil Nadu Young Thinkers Forum) பணியாற்றிக்கொண்டிருப்பவர் திருப்புவனத்தை சேர்ந்த மாரிதாஸ். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் முக்கிய முகங்களுள் ஒருவராக உள்ள மாரிதாஸ், யூடியூப்பில் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்பெற்றவர்.

‘ஏன் தி.மு.க. அழிய வேண்டும்’,‘தி.மு.க. பாகிஸ்தான் தொடர்பு’, ‘தீவிரவாதிகள்+கொரோனா ’ என்று பல சர்ச்சை தலைப்புகளில் வீடியோ போட்டு வருகிறார். வெறும் அரசியல் ரீதியான விமர்சனங்களாக அல்லாமல், மதப்பிரிவினையை தூண்டி வருவதாக இவர் மீது புகார்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வரிசையில், ‘தி.மு.க.+ தி.க.+ செய்தி நிறுவனங்கள், நடுநிலை இந்துக்கள் இளிச்சவாயன்களா?’என்று சமீபத்தில் இவர் போட்ட வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், மத்திய அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருது வாங்கிய பிரபல நியூஸ்18 சேனல் குணசேகரன், நியூஸ் 7 நெறியாளர் நெல்சன், புதியதலைமுறை டி.வி. நெறியாளர் கார்த்திகைசெல்வன், செந்தில் போன்றோரை தி.மு.க. கைக்கூலிகள் என்று கடுமையாக விமர்சித்தார்.

அதோடு, மதப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், இவர்களுக்கு பின்புலமாக, இஸ்லாமியர்களே செயல்படுவதாகவும் கூறினார். குறிப்பாக, ‘கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை முஸ்லிம்கள் பத்திரிகையாளர்கள் சிலர் பின்புலமாக இருந்து நடத்தி வருகின்றனர்; அவர்கள் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புகின்றனர்’ என்று கூறியிருந்தார். மேலும், “முகம்மது நபியை பற்றி ஒரு கார்ட்டூன் வெளியிட யாருக்காவது தில் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் கூறிய பிரிவினை கருத்துகள் தற்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. மாரிதாஸ் சவாலுக்கு ஆதரவு தரும் விதமாக, கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர், முகம்மது நபிகள் கார்ட்டூனை, 48 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இது முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த துடிக்கும் மாரிதாஸ் மற்றும் கார்ட்டூனிஸ்ட் வர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் முஸ்லிம் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவிலும், பிரான்சிலும் முகம்மது நபி பற்றி தவறான திரைப்படம், கார்ட்டூன் வெளியிட்டதற்கே தமிழகத்தில் எவ்வளவு போராட்டங்கள் நிகழ்ந்தன என்பது நமக்கு நினைவிருக்கும். தமிழகத்திலேயே அப்படியொரு கார்ட்டூன் வெளியானால், மக்களை இயக்கங்களால் கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

அ.தி.மு.க அரசு உடனடியாக கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நிகழுவதற்கான வாய்ப்பை, தமிழக அரசே ஏற்படுத்திக்கொடுத்ததாக அமைந்துவிடும்.” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
6
0
Would love your thoughts, please comment.x
()
x