தேர்வு மையத்துக்கு 105 கி.மீ. தூரம் மகனை சைக்கிளில் அழைத்து வந்த தந்தை…

மத்திய பிரதேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தந்தை ஒருவர் தேர்வு மையத்துக்கு தனது மகனை 105 கி.மீ. தூரம் சைக்கிளல் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உளளது. அந்த மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உளள பைதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் சோப்ராம் (வயது 38). இவரது மகன் ஆஷிஷ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடங்களல் தோல்வி அடைந்து இருந்தான்.
இந்த நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வை எழுத ஆஷிஷ் விண்ணப்பித்து இருந்தான். அவனுக்கு பைதிபூர் கிராமத்தில் இருந்து 105 கி.மீ. தொலைவில் உளள தார் நகரத்தில் அமைந்துள்ள பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து முடக்கம், வாடகைக்கு கார் பிடித்து செல்ல கையில் போதிய பணமின்மை மற்றும் மோட்டார்சைக்கிள கூட இல்லாததன் காரணமாக மகனை எப்படி தேர்வு மையத்துக்கு அழைத்து செல்வது என்பது தெரியாமல் சோப்ராம் திகைத்தார். பின்னர் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது சைக்கிளலேயே அழைத்து செல்ல முடிவு செய்தார்.
அதன்படி கடந்த திங்கட்கிழமை மகனுடன் தனது பயணத்தை தொடங்கிய சோப்ராம், உடல் அலுப்பு, சோர்வையும் பொருட்படுத்தாமல் மணிக்கணிக்கில் அழுத்தி சைக்கிளை அழுத்தி நேற்று முன்தினம் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்தை வந்தடைந்து மகனை தேர்வு எழுத வைத்தார்.
இதுபற்றி சோப்ராம் கூறுகையில், ‘நான் எனது மகனை சைக்கிளில் அழைத்து வந்திருக்காவிட்டால் அவனது படிப்பு ஒரு வருடம் வீணாகியிருக்கும்’ என்று உருக்கமாக கூறினார்.