கல்லுரிகளுக்கும் தேர்விலிருந்து விலக்கு – முதல்வர் அதிரடி முடிவு!!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே, பள்ளி கல்லூரிகளை மூட அறிவுறுத்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இதனிடையே, பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும்.என்று தமிழக அரசு தெரிவித்தது.

எனினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கல்லூரிகள் திறப்பு தள்ளி போய் கொண்டே வந்தது. அத்துடன், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இதுதொடர்பாக ஆராய உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

அதனைத்தொடர்ந்து, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பக்பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும். முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை ஜூலை 27ஆம் தேதி விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை பிறப்பித்தது.

மேலும், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின்பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரியர் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x