காரைக்கால் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- தொழிலாளி கைது

காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்தநிலையில் அந்த தொழிலாளியின் மகளான 4-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் மிரட்டி, அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதுபற்றி சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, ஜெயராமன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி நெடுங்காடு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், ஜெயராமனை நேற்று கைது செய்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்பேரில், ஜெயராமன் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x