அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு இரும்புக்கம்பியால் தர்ம அடி!!

அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் மணிகண்டன், மண்டையில் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண், திருவண்ணாமலை அத்தியந்தலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இதேபகுதியில் துறவியாக நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் வசித்து வந்த வீட்டுக்குள் மணிகண்டன் நேற்று அத்துமீறி நுழைந்திருக்கிறார். அத்துடன் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இரும்புதடியால் சரமாரியாக மணிகண்டனை தாக்கினார். இதில் சிக்கி, தலையில் காயங்களுடன், வெளியே ஓடி வந்தபோது, மணிகண்டனை பொதுமக்கள் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x