மணல் கடத்தல்காரர்களுக்கு துணையாக சென்ற ஏட்டு… தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!

திருச்சியில் மணல் கடத்தி வந்த கடத்தல்காரர்கள் பொது மக்களை பார்த்ததும் தப்பிவிட, அவர்களுடன் துணைக்கு வந்த போலீஸ் ஏட்டு சிக்கிக்கொண்டு தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி, ஜீயபுரம் வழியாக, அதிகாலை, 3:00 மணிக்கு, சிலர் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி சென்றனர். ஆட்டோவின் முன், பைக்கில் ஒருவர் பாதுகாப்புக்காக சென்றார்.அந்த ஆட்டோ, வேகமாக சென்று விபத்தில் சிக்கியது. இதையடுத்து, மணல் கடத்தி வந்த மூவர், தப்பியோடி விட்டனர். பைக்கில் வந்தவர், பொதுமக்களிடம் சிக்கினார்.

அவருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள், சோமரசம் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், ஜீயபுரம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பரமேஸ்வரன்,(35) என்பது தெரிந்தது.பரமேஸ்வரன் மீது துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x