“மாஸ்க் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்வதற்கு தடைவிதியுங்கள்!” டி.ஜி.சி.ஏ அதிரடி

முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாதவர்களை, விமானங்களில் பயணம் செய்வதிலிருந்து தடை விதிக்குமாறு இந்தியாவின் விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ) விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், விமான பயணத்தின் போது பயணிகள் முகமூடிகளை அணியவில்லை என்றாலோ அல்லது கொரோனா நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றாலோ, விமான மதிப்பீட்டிற்குப் பிறகு விமானங்களில் பறக்க தடை செய்வதற்கான பட்டியலில் சேர்க்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x