“டெல்லிக்கே ராஜாவா இருந்தாலும் தமிழகத்தில் பாஜக இன்னும் வளரவே இல்ல!” அமைச்சர் செல்லூர் ராஜூ!!

ஹெச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு ‘பாஜக டெல்லிக்கு ராஜாவாக தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்’ எனத் தெரிவித்தார். ‘ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். அவரிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது’ என தெரிவித்த்தார்.

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘பாஜக டெல்லிக்கு ராஜாவாக தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும்’ என்று தெரிவித்தவர்,’ மோடி போன்ற மனிதநேயமிக்க பிரதமர் யாரும் இல்லை’ என்று மோடிக்கு புகழாரமும் சூட்டினார்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ‘விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள், விஜய் தமிழர், நல்ல நடிகர் அவ்வளவுதான், அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், அம்மா மீது ஈர்ப்பு உள்ளதை காட்டுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x