தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை.. 10 பேரை கைது செய்த போலீசார்!!

ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் மற்றும் தீவட்டிப்பட்டி காவல்நிலைய பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தாரமங்கலம் வட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனை மிக அதிகமாக செய்யப்படுகிறது. லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து போலீசாரும் அவ்வப்போது ஒருசிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நம்பர் லாட்டரி சீட்டு சிறப்பு விற்பனை முகாமை நடத்தியுள்ளனர். தாரமங்கலத்தில் உள்ள பவளத்தானூர் பகுதியில் ஒரு கும்பல் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தீவட்டிப்பட்டி காவல்நிலைய எல்லையில் காடையாம்பட்டி, நாச்சினம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று நம்பர் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகருக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x