கொரோனா அச்சத்தால் கேள்வி நேரத்தை ரத்து செய்த மோடி, மாணவர்களின் உயிரை மறந்ததேன்? அசாதுதீன் ஒவைசி கேள்வி!

நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரத்தை வேண்டாம் என்று கைவிட்ட மத்திய அரசு, மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்வது நியாயமா? என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.

அனைத்திந்திய மஸ்ஜிதே இதிஹாதுல் முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர், “கொரோனா காலத்தில் நாடாளுமன்றத்தில் மோடி கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டார், ஆனால் நீட் தேர்வில் மாணவர்கள் மட்டும் பதிலளிக்க வேண்டுமா? கொரோனா அச்சம் காரணமாக கேள்வி நேரத்தை ரத்து செய்யும் பிரதமர் மோடி, அதே அச்சத்தோடு தேர்வுக்கு செல்லும் கோடிக்கணக்கான மாணவர்களின் உயிரை மதிக்க வேண்டாமா? கேள்வி நேரம் இல்லாததால் கொரோனா நெருக்கடி குறித்து கேள்விகளை எழுப்ப முடியுமா,  கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது என்பது பற்றி விவாதங்களை நடத்த முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது என ஒவைசி தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகள் குறித்து பல நாடுகளின் பிரதமர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வருவதாகவும், அதே நேரத்தில் மோடி வீடியோ செய்திகளை மட்டும் வெளியிடுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x