“8 மாதங்கள் அல்ல… எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது!” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார்.

விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். அதில் “தமிழ்நாடு தொடர்ந்து 5 மாத காலமாக உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் கிரிஷ் கருமான் விருதை பெற்றுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு இதுவரை 7,418 இப்படி தொகையை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார். கூட்டுறவு வங்கி மூலம் இதுவரை 48 ஆயிரம் கோடி வரை விவசாயி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் குடிமராத்து திட்டத்தின் மூலம் கடைமடைப் பகுதிகளில் தடையில்லாமல் தண்ணீர் கிடைத்ததால் இந்த ஆண்டு டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் ரகங்களில் பாதுகாவலர் வரை நெல் ஜெயராமன் அவரின் நினைவை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர். “8 மாதங்கள் இல்லை, எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வகுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி.

திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். ஆனால் இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர்.” என்று கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x