“ப்ளீஸ் நிறுத்துங்கப்பா..!” ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்த ரஜினி ரசிகர் மன்ற தலைமை!

ரஜினி அரசியல் வருகை குறித்து அடுத்த உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதத்தில் அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகளை தொடக்கி விட்டதாகவும் தகவல் வெளியானது. அதே போல நவம்பர் மாதம் நல்ல செய்தி வர உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸும் கொளுத்தி போட்டார்.

தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக ஆரம்பித்துள்ள நிலையில், இது போன்ற கருத்துக்கள் ரஜினி ரசிகர்களுக்கு இன்பச் செய்தியாக அமைகிறது. அதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மதுரை, வேலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் “இப்ப இல்லன்னா ஆட்சி மாற்றம் எப்பவும் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதல்வரே” என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம் என ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x