செப்டம்பர் 15 முதல் சர்வதேச விமானங்களை அனுமதிக்க சவுதி முடிவு

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவையை அனுமதிக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்று காரணமாக சவுதியில் விமானச் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிமுகப்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

சவுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், அனைத்து வழிப் போக்குவரத்துகளும் சவுதியில் அனுமதிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x