“மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு எந்த இடஒதுக்கீடும் வழங்க முடியாது!” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன .
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது . அப்போது, “மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் அல்லது 27 சதவீதம் என எந்த இட ஒதுக்கீடும் இந்த ஆண்டே கொடுக்க முடியாது” என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .