“பாஜக அரசின் ஆணவத்தால், நாடு கடும் பொருளாதார பேரழிவை சந்தித்துள்ளது!” ராகுல்காந்தி விமர்சனம்!!

மத்திய அரசின் முடிவற்ற ஆணவம் இந்திய நாட்டிற்கு பெரும் பொருளாதார பேரழிவை ஏற்டுத்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ‘டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், உட்பட 8 எம்.பிக்களை ஒருவாரம் இடைநீக்கம் செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
’Muting Of Democratic India’ continues: by initially silencing and later, suspending MPs in the Parliament & turning a blind eye to farmers’ concerns on the black agriculture laws.
This ‘omniscient’ Govt’s endless arrogance has brought economic disaster for the entire country.
— Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2020
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “ஆரம்பத்தில் மவுனம் சாதிப்பதன் மூலமும், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும், விவசாய கறுப்பு சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை கண்மூடித்தனமாக திசை திருப்புவதன் மூலமும், ஜனநாயக இந்தியாவை முடக்குவது என்பது தொடருகிறது. இந்த எல்லாம் அறிந்த மத்திய அரசின் முடிவற்ற ஆணவம் இந்திய நாட்டிற்கு பெரும் பொருளாதார பேரழிவை ஏற்டுத்தி உள்ளது” என கூறி உள்ளார்.