“உங்க பெருமையை இப்போது தான் இந்தியா உணர்கிறது!” மன்மோகன் சிங்கிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!

மன்மோகன் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை போன்ற சிந்தனையுள்ள பிரதமர் தற்போது இல்லாதை இந்தியா உணர்கிறது என்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 88 வது பிறந்த தினமாகும். இந்நிலையில் ராகுல் காந்தி தன் வாழ்த்துச் செய்தியில், “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு சிந்தனைமிக்க பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு அழகான வருடம் முன்னிருக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.
Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020
காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு இந்தியரின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்காகப் பாடுபட்ட டாக்டர் மன்மோக்சன் சிங்கின் அர்ப்பணிப்பை நாம் இன்று கொண்டாடுவோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
In his journey towards greatness, he took a billion people along.
One of the most competent world leaders, Dr. Manmohan Singh's vision for our Nation is uncompromising.
India is forever indebted to this great son for leading her through highs & lows.#HappyBirthdayDrMMSingh pic.twitter.com/LdNIHVmkwc
— Congress (@INCIndia) September 26, 2020
இன்னொரு ட்வீட்டில் காங்கிரஸ் கட்சி, ‘திறமை மிக்க உலகத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் தொலை நோக்குப் பார்வை நம்நாடு குறித்த சமரசமற்ற சிந்தனை கொண்டது. இந்தியாவை அதன் உயரங்களிலும் தாழ்விலும் வழிநடத்திச் சென்ற இந்தியாவின் மிகப்பெரிய மகனுக்கு இந்தியா எப்போதும் கடன் பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.