போதைப் பொருளை நடிகர்கள் யாரும் பயன்படுத்தவில்லையா? நடிகை குஷ்பூ கேள்வி!!
![](https://thambattam.com/storage/2020/09/8-kushboo-congress-780x470.jpg)
போதைப் பொருள் வழக்கில் ஏன் நடிகைகள் மட்டும் விசாரிக்கப்படுகிறார்கள்? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர்களுக்குள் போதைப் பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளதாக கடந்த சில மாதங்களாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக சில வாட்ஸ் ஆப் சாட்களில் ரியா, சுஷாந்துக்காக போதைப் பொருட்களை வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் பல பாலிவுட் முன்னணி நடிகர் , நடிகைகள் பெயர் அடிப்பட்டு வருகிறது. இதில் ரகுல் பிரீத் சிங், ஷரத்தா கபூர், சாரா அலி கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய நடிகைகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுபற்றி நடிகை குஷ்பு டிவிட்டரில் நடிகை குஷ்பு “ஏன் நடிகைகள் மட்டும் போதைப் பொருள் வழக்கில் விசாரிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் யாருமே போதைப் பொருள் பயன்படுத்தவில்லையா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.