“தோனி மாதிரில்லாம் இல்ல… ‘இவர்’அதுக்கும் மேல…!” சசிதரூருக்கு பாடம் புகட்டும் கவுதம் கம்பீர்!

சஞ்சு சாம்சனை ‘அடுத்த எம்.எஸ் தோனி’ என்று அழைத்த சசி தரூருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் சரியான பதில் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரின் 9ஆவது போட்டி பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடியான பேட்டிங்தான். 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 85 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

இதையடுத்து மூத்த அரசியல்வாதியும் காங்கிரஸ் எம்.பி.யுமான சஷி தரூர் நேற்றிரவு ராஜஸ்தானின் வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். மேலும் கேரள கிரிக்கெட் வீரருக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வரும் சஷி தரூர் இந்த முறை சஞ்சு சாம்சனை ‘அடுத்த எம்.எஸ் தோனி’ என்று அழைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான வெற்றி. எனக்கு சஞ்சு சாம்சனை பல காலங்களாக தெரியும். அவர் 14 வயதாக இருக்கும் போது, நான் அவரிடம் நீங்கள் அடுத்த தோனியாக வருவீர்கள் என்று சொன்னேன். அந்த நாள் இப்போது வந்துவிட்டது. இந்த ஐ.பி.எல்லில் அவரது இரண்டு அற்புதமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர் வந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

சசி தரூரின் இந்தப் பதிவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், “சஞ்சு சாம்சன் அடுத்தவராக இருக்க தேவையில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் சஞ்சு சாம்சன் ஆக இருப்பார்” என்று பதிலளித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x