“நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படும்!” நிதி அமைச்சர் தகவல்!

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “நடப்பாண்டுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் (செஸ்) வரி ரூ. 20,000 கோடி இன்று இரவு மாநிலங்களுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 24,000 கோடி அடுத்த வார இறுதிக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x