“ஜெயலலிதா கொடுத்த பதவி.. உயிரோடு இருக்கும் வரை அவைத்தலைவராகத் தான் இருப்பேன்” – மதுசூதனன்

உடல்நிலை காரணமாக அதிமுக அவைத்தலைவர் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் மதுசூதனன்.
“அதிமுக அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன், இதில் எந்த மாற்றமும் இல்லை.
அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது. நான் உயிரோடு இருக்கும் வரை அவைத்தலைவராகத் தான் இருப்பேன்.
ஓ.பி.எஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிச்சயம் நிறைவேற்றுவார்” என தெரிவித்துள்ளார் மதுசூதனன்.