ஐபில் 2020:20 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதெராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், அம்பதி ராயுடு வாட்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 14வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது.பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார். கடைசியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர், 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 13 பந்துகளை சந்தித்த வார்னர் 9 ரன்களை எடுத்து சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினார்.

வில்லியம்சன் தொடக்க வீரர் பிரிஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அடுத்து களமிறங்கிய பிரியம் கர்ருடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒற்றை வீரராக போராடிய வில்லியம்சன் 39 பந்தில் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து கரன் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x