6 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 60 வயது மூதாட்டி உட்பட மூவர் கைது!!

புதுக்கோட்டையில்  ஆறு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 60 வயது மூதாட்டி உட்பட மூவரை கைது செய்த போலீசார், பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை வடக்கு நாலாம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கணேஷ் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 6 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சாரதா(60) என்ற மூதாட்டியையும், அவருக்கு உடந்தையாக இருந்த களபம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (31), மாந்தாங்குடியைச் சேர்ந்த வீரன்(55) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட 6 பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அறிவுரை கூறிய போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x