“மார்க்கெட்களை மூடவும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்” – கெஜ்ரிவால் கோரிக்கை

டில்லியில், கொரோனா பரவலின் மையமாக உள்ள பகுதிகள் மற்றும் மார்க்கெட்களை மூடவும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில், கொரோனாவின் 3வது அலை வீசுகிறது. அங்கு 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,600 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 7 ,713 பேர் உயிரிழந்து வருகின்றனர். டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரப்பி வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி கவர்னர் மற்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். மழைகாலத்தில் தினமும் 15 ஆயிரம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் கெஜ்ரிவால் அளித்த பேட்டி: டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படும் மார்க்கெட்கள் மற்றும் கொரோனா ஹாட்ஸ்பாட்களாக உள்ள பகுதிகளை மூட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

மத்திய அரசின் அறிவுரைப்படி, டில்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளித்திருந்தோம். ஆனால், தற்போது தொற்று அதிகரித்து வருவதால், 50 பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கவர்னரிடம் பரிந்துரை செய்துள்ளோம். அவர், விரைவில் ஒப்புதல் தருவார் என எதிர்பார்க்கிறோம். கொரோனா தங்களை பாதிக்காது என மக்கள் நினைக்கின்றனர். கொரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தும். தயவு செய்து சமூக விலகலை கடைபிடியுங்கள் என இரு கரம் கூப்பி உங்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x