ஏல முறைகள் குறித்த பொருளாதார ஆராய்ச்சிக்காக இருவருக்கு பொருளாதார நோபல் பரிசு!!

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

உலகின் உயரிய விருது நோபல் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு நோபல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஏல முறைகள் குறித்த பொருளாதார ஆராய்ச்சிக்காக பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலக் கோட்பாடின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x