தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!

தாய்லாந்தில் பிரதமர் அலுவலகம் முன்பு கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடியாட்சியில் சீர்த்திருத்தங்களை கொண்டுவரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக்கோரி, கடந்த 3 மாதங்களாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்க பொது இ‌டங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே பிரதமர் அலுவலகம் முன்பு திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும், ஜனநாயகத்தை வாழ வைக்கவேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். தாய்லாந்து மன்னர், அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினரும் குவிந்தததால் அப்பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x