நீட் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி மாணவர்!!

அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனா். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இணையதளங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டைவிட 9 % அதிகம். நிகழாண்டில், நாமக்கல் மாணவா் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அந்த மாணவரின் தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டிலேயே முதல் மாணவராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அப்தாப் என்பவர் 99.99 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் முடிவுகளை அறிய முற்பட்டதால் தேசிய தேர்வு முகமை இணையதளப் பக்கம் பல மணி நேரங்களுக்கு முடங்கியது. இதனால் பல மாணவா்கள் தேர்வு முடிவுகளை அறிய இயலாமல் அவதிப்பட்டனா்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x