உத்திரபிரதேசத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 வயது சிறுவன்…!

உத்திரபிரதேசத்தில் 7 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலிகரில் 7 வயது சிறுவன் தனது ஐந்தரை வயது அண்டை வீட்டார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் போக்ஸோ வழக்கை (POCSO case) பதிவு செய்துள்ளனர். கவர்சி காவல் நிலையத்தில் IPC-யின் பிரிவு 376 (கற்பழிப்பு வழக்கு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் செவ்வாய்க்கிழமை சிறார் நீதி மன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்குமார் தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, இந்த சம்பவம் அக்டோபர் 12 ஆம் தேதி நடந்தது. “என் மகள் தற்செயலாக அங்கு சென்றிருந்த தனது பந்தை எடுக்க பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தாள். அவள் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது. அப்போது அவர் பக்கத்து வீட்டு குத்தகைதாரரின் மகனால் பிடிக்கப்பட்டார்” என்று FRI-யில் கூறப்பட்டுள்ளது. “புகாரில் சிறுவனின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஏழு வயது என தெரியவந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.