பறக்கும் விமானத்தில் பயமுறுத்திய தீவிரவாதி.. பீதியில் உறைந்த பயணிகள்!

டெல்லியில் இருந்து கோவா சென்றுகொண்டிருந்த விமானத்தில், தன்னை ‘ஒரு தீவிரவாதி’ என்று சொல்லி சக பயணிகளிடம் பீதியை கிளப்பிய பயணியால் பரபரப்பு ஏற்பட்ட்டது.
டெல்லியில் இருந்து கோவா சென்றுகொண்டிருந்த விமானத்தில், பயணித்த ஜியா உல் ஹக் என்பவர், தன்னை சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி எனக் கூறியுள்ளதுடன், இந்த விமானத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறார் என்ற கூறியதும் பயணிகளிடம் பீதியும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.
கோவாவில் உள்ள டாபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் ஹியூமன் பிஹேவியர் மருத்துவமனையில் மனநோய்க்கான சிகிச்சை பெறுபவர் எனத் தெரியவந்தது.
விமானப் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்திய ஜியா உல் ஹக், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.