நீட் தேர்வு… தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!! வெளியான அதிர்ச்சி தரும் உண்மைகள்!!

நீட் வந்த பிறகு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்பாவு ரத்தினம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளது. அதில், “2015-16ல் தமிழ் வழியில் படித்த 456 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 54 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 2016-17ல் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 438 அரசு கல்லூரிகளிலும் 99 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள்.

அதனையடுத்து, 2017-18ல் 40 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். 2018-19ல் 88 பேர் அரசுக் கல்லூரிகளும், 18 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு 2015-16 மற்றும் 16-17ம் ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்த 1047 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

நீட் வந்த பிறகு 2017-18 மற்றும் 18-19ம் ஆண்டுகளில் மொத்தம் 158 மாணவர்களே தமிழ் வழியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை 8 மடங்கு வரை சரிந்திருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x