மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது தமிழக அரசு… அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது.!

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டாா். அதில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.

இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15-லிருந்து ரூ.16.50-ஆக உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x