சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது!!!

சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதுக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் ஒருபோதும் அராஜகத்துக்கு தலைவணங்க மாட்டோம். கடைசி மூச்சு இருக்கும்வரை பெண்களின் மாண்புக்காக போராடுவோம். குஷ்பு ட்வீட் விடுதலை சிறுத்தைகள் எனது கைதால் மகிழ வேண்டாம். குஷ்பு எங்களின் பலத்தை கண்டுதான் கைது செய்துள்ளனர் நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x