பீட்டர்பாலை தேடிப்போன வனிதா… அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு

தன்னை மீண்டும் தேடி வந்த வனிதாவிடம், எந்த மூகத்தை வைத்து நீ மீண்டும் என்னிடம் வருகிறாய் என்று பீட்டர் வெளுத்து வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையான வனிதா சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த பீட்டர் பாலின் மனைவி என்னை விவகாரத்து செய்யாமல் எப்படி திருமணம் செய்யலாம், என்று புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் எல்லாவற்றையும், வனிதா தன்னுடைய செல்வாக்கை வைத்து நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், வனிதா மற்றும் பீட்டர்பால் சமீபத்தில் கோவா சென்று திரும்பிய போது, பீட்டர்பாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்தார். அப்போது வனிதா, பீட்டர் பால் மிகவும் குடிக்கிறரார், அவர் மனைவி சொன்னது எல்லாம் உண்மை தான் போல, அவர் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, தற்போது வனிதா, பீட்டர் பாலை மீண்டும் தேடிப் போயுள்ளாராம். ஏனெனில் அவருடைய யூ டியூப் சேனலை நடத்துவதற்கு யாரும் முனவரவில்லையாம், இதனால் அவர் பீட்டர் பாலை தேடிப் போயுள்ளார். ஆனால், நண்பர் வீட்டில் தங்கியிருக்கும் பீட்டர் பால் எந்த முகத்தை வைத்து நீ இங்கு வந்தாய், என்னை அசிங்கப்படுத்திவிட்டாய் என்று கடுமையான வார்த்தைகளை விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி உன்னால் நான் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை, என் முகத்திலே முழிக்காதே என்று கூறிவிட்டாராம். எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றும், பீட்டர் பால் ஒரு கட்டத்தில் அவரை அடிக்கவே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர், உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம் என நினைத்து தான் உன்னை கல்யாணம் செய்தேன். ஆனால் நீ என் பெயரையே கெடுத்து விட்டாயே என வனிதாவிடம் கோபப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x