வெள்ளை மாளிகை அருகே மக்களை கத்தியால் குத்திய மர்மநபர்.. தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட விபரீதம்??

அமெரிக்காவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதையொட்டி ஒட்டுமொத்த அமெரிக்காவும் பரபரப்பாக இயங்கியது. தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு வீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மக்களை மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

எனினும் இந்த கத்திகுத்து தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x