பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரத்திற்கு பரோலை நீட்டித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!!

பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு கொரோனா காலத்தில் 3 மாதங்கள் பரோல் வேண்டுமென அவருடைய தாயார் அற்புதம்மாள் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

எனவே அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் வரும் 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மேலும் 4 வார காலங்கள் பரோல் நீட்டிக்கவேண்டும் எனவும் அவருடைய தாயார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேலும் 2 வாரம் பரோல் நீட்டிக்க தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் நவம்பர் 9ஆம் தேதி முடியவிருந்த பரோல் நவம்பர் 23ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x