கேம் விளையாட செல்போன் கொடுக்காத அக்கா.. விஷம் குடித்த தங்கை!!

விருதுநகரில் கேம் விளையாட அக்கா செல்போன் தராததால் கோபத்தில் தங்கை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே சின்னசெட்டி குறிச்சியை சேர்ந்தவர்கள் ராமலட்சுமி-முருகன் தம்பதியர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கார்த்திகா நர்ஸிங் முடித்துள்ளார். அபிநிக்கா பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்.

தற்போது கொரோனா பொதுமுடக்கத்தினால் வீட்டில் இருக்கும் இருவரும் தந்தையின் செல்போனில் மாறி மாறி கேம் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இருவரும் மாறி மாறி கேம் விளையாடி கொண்டிருக்கும்போது கார்த்திகா தங்கைக்கு செல்போனை கொடுக்காமல் நீண்ட நேரமாக விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கேம் விளையாட செல்போனை கொடுக்காத கோபத்தில் தங்கை அபிநிக்கா வீட்டில் பருத்திக்காட்டுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அபிநிக்காவை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அபிநிக்கா பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை சம்பவம் குறித்து பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேம் விளையாட செல்போன் கொடுக்காததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x