பாலியல் புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தை தீவைத்து கொளுத்திய குற்றவாளி!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் போலீஸில் புகார் கொடுத்ததால் அந்த பெண்ணின் குடும்பத்தையே தீவைத்து கொளுத்திய குற்றவாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.

மத்திய பிரதேசம் குவாலியரில் அக்டோபர் 21ஆம் தேதி, ஒரு பெண் தனது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், 32 வயது நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டிச் சென்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் இதுபற்றி தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் அப்போது புகார் எதுவும் கொடுக்கவில்லை. பெண்ணிடமிருந்து பெரிய எதிர்ப்புகள் எதுவும் வராமல்போகவே அந்த நபர் திரும்ப தன்னை வந்து சந்திக்குமாறு அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் அந்த நபர்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்குப்பதிவும் செய்திருக்கிறார். இதுபற்றி தெரியவந்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவர்மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். காப்பாற்றச் சென்ற அந்தப் பெண்ணின் கணவருக்கும், அவர்களின் 7 வயது மகளுக்கும் தீவைத்துள்ளார். பலத்த காயமடைந்த மூவரும் உயிருக்குப் போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளியை கைதுசெய்ய அவருடைய வீட்டுக்குச் சென்ற போலீஸாரிடம், அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக அவருடைய தாயார் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்துவருவதாகவும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சங்கை கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x