பீஹார் தேர்தலில் வெற்றி பெற்ற 241 பேரில், 163 பேர் மீது குற்ற வழக்குகள்!! – ADR அமைப்பு அதிர்ச்சி தகவல்

பீஹாரில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றோரில், 194 பேர் (81%) கோடீஸ்வரர்கள்; 163 பேர் (68% ) மீது, குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

பீஹாரில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில்,தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்த, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலில் வெற்றிபெற்ற, 241 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், 163 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 123 பேர் மீது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என, மிக மோசமான குற்ற வழக்குகள் உள்ளன.

வெற்றி பெற்றோரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த, 54 பேர்; பா.ஜ.,வை சேர்ந்த, 47 பேர்; ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, 20 பேர்; காங்., கட்சியை சேர்ந்த, 16 பேர்; கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த, 10 பேர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின், ஐந்து பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. வெற்றி பெற்றுள்ள, 241 பேரில், 194 பேர் கோடீஸ்வரர்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x