இரத்தின கற்களால், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆப்ரிக்கா ஏழை…

தான்சானியா நாட்டில் சுரங்கத்தில் கிடைத்த ரத்தின கற்களால், சில மணி நேரங்களிலே கோடீஸ்வரராகியிருக்கும் தொழிலாளியின் நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தான்சானைட் கற்கள்(TANZANITE), வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படுகிறது. இது ஆபரணங்களை தயாரிக்க பயன்படுகிறது. பச்சை, சிவப்பு, ஊதா மற்றும் நீலம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இந்த கற்கள் இருக்கும். பூமியில் உள்ள மிக அரிதான ரத்தினக் கற்களில் ஒன்றாக கருதப்படும் இவைகளை அடுத்த 20 ஆண்டுகளில் பார்க்கமுடியாமலும் போகலாம் என புவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தான்சானியாவில் ஒரு ஏழை சுரங்கத் தொழிலாளி சானினியு லைசர் (52) . அவர் கடந்த வாரம் 9.2 கிலோ மற்றும் 5.8 கிலோ எடையுள்ள இரண்டு ரத்தின கற்களை தனது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுத்துள்ளார்.இதுவரைக் கண்டெடுக்கப்பட்ட தான்சானைட் கற்களிலேயே இவை மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது அதனை கடந்த புதன்கிழமை அன்று வடக்கு பிராந்தியமான மன்யாராவில் ஒரு வர்த்தக நிகழ்வின் போது சுரங்க அமைச்சகத்துக்கு சுமார் 25 கோடிக்கு விற்றுளார்.

தற்போது தான்சானியா என்ற ஏழை நாட்டில் புதிய பணக்காரராக மாறியுள்ள லைசருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். தன்னுடைய வளர்ச்சியை குறித்து அவர் கூறியதாவது, ” இந்த பணத்தை நான் வசிக்கும் மன்யாராவில் உள்ள சிமஞ்சிரோ மாவட்டத்தில் தனது சமூகத்தில் முதலீடு செய்யவுள்ளேன். அங்கு ஒரு ஷாப்பிங் மால் மற்றும் ஒரு பள்ளியை உருவாக்க விரும்புகிறேன். இந்த பள்ளியை என் வீட்டிற்கு அருகில் கட்ட விரும்புகிறேன். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாத பல ஏழை மக்கள் இங்கு உள்ளனர். நான் படித்தவனல்ல, ஆனால் விஷயங்கள் தொழில்முறை வழியில் இயங்குவதை நான் விரும்புகிறேன். எனவே எனது குழந்தைகளை தொழில் ரீதியாக நடத்த விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x