இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது? விளக்கும் ரயில்வே

2024ஆம் ஆண்டு முதல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்களை காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் நீக்கவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் பரவியது.
இதுதொடர்பாக தற்போது ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதாவது ரயிலில் இருக்கைகளைவிட பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த முறை நீக்கப்படாது. தற்போது தேவைக்கேற்க ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருகிறது. காத்திருப்பு பட்டியல் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை நீக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.