சிறுமியின் கண்களை சேதப்படுத்தி, பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தில் உள்ள கவ்வாஹா பார்கி கிராமத்தை சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் சிறுமி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது 3 பேர் கும்பல் சிறுமியை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகின்றது. இது தொடர்பாக உடன் இருந்த சிறுவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிறுமியின் பெற்றோர் விரைந்தனர்.

பக்கத்து கிராமத்தில் உள்ள நிலத்தில் சுயநினைவை இழந்த நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேரை ஹர்லாக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x