குடியரசு தினத்தன்று தமிழகத்திலும் டிராக்டர் பேரணி – திமுக அறிவிப்பு…!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் போராடி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காத நிலையில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று திமுக சார்பில் தமிழகத்தில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.