இனி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுாறு சதவீதம் பேர் பயணிக்கலாம்..

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நேற்று முதல் நுாறு சதவீதம் பேர் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 60 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது பேருந்துகளில் நுாறு சதவீதம் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.