மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்; கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை

நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டுமென, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி மனுதாரர் – எதிர்மனுதாரர்களை நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு காவலர்கள் நேரடியாகச் சென்று குற்றச்செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுத்து குற்றச்செயல்கள் இல்லை என அறிக்கை அளிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளில் குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மதுப்பழக்கம் உள்ளவர்களை கண்டறிந்து, மது அருந்துவோர் மறுவாழ்வு மைய அறிவுரைகளை பெற்று மதுப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகைகள், போராட்டங்களின்போது, அளவான காவலர்களை பணியமர்த்தி, அவர்களின் பணிச்சுமையைக் குறைக்க அதிக தளவாடங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூடுதல் டிஜிபியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x