சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்தில், அதன் ஆட்சியராக பணியாற்றி வந்த சீதாலட்சுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்று தொற்று இருப்பது உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.