சந்தேகத் தீயால்.. மனைவியுடன் சேர்த்து மகளையும் எரித்த கணவன்..

நடத்தையில் சந்தேகித்த கணவர், மனைவியை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா (வயது 35). மகள் பவித்ரா (18). இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஜீவாவின் நடத்தையில் கணவர் பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஜீவா அடிக்கடி செல்போனில் பேசுவதையும் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர். ஆனால் மனைவி மீது பார்த்திபன் கோபத்தில் இருந்தார். அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் எழுந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தூங்கி கொண்டிருந்த மனைவி ஜீவா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஜீவா அலறி துடித்தார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள் பவித்ரா இதனை தடுக்க முயன்றார்.

ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன் மகள் பவித்ரா மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். மேலும் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் இருவரும் உடல் கருகி அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பார்த்திபன் குடும்பத்துடன் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து கிடந்தார்.

பார்த்திபனும், அவரது மகள் பவித்ராவும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடிகிடந்தனர். அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

நடத்தையில் சந்தேகத்தில் மனைவியை உயிரோடு கணவர் எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத் தீ ஒரு குடும்பத்தையே எரித்துள்ளது.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x