ஆளுனர் மாளிகை: 76 சிஆர்பிஃப் வீரர்களுக்கு கொரோனா!

சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 76 சிஆர்பிஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இங்குப் பாதுகாப்புப் பணியில் பல்வேறு பிரிவு காவலர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக சிஆர்பிஃப் வீரர்கள் ஷிப்ட் அடிப்படையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குச் செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது, வழக்கமான கால இடைவெளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனைதான்.

பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வெளியானது. அதன்படி, பணியிலிருந்த 76 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளைத் தொடர்ந்து, 76 பேரும் சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பிட்ட வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் மாளிகையில் பணியமர்த்தப்படும் சிஆர்பிஃப் வீரர்கள் பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சிஆர்பிஃப் தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுவர். இப்போது 76 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பூந்தமல்லி அலுவலகத்தில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 76 காவலர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x