கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குறிப்பாக கொச்சின், எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், வயநாடு, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இன்று காலை முதல் இடைவெளிவிட்டு கனமழை பெய்துவருவதால், மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.